ஆம்பூர் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இரு பெண்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே பகுதியை சேர்ந்த வசந்தா & சாவித்ரி இருவரும் ரயில் தண்டவாளத்தை அலட்சியமாக கடந்ததாக தெரிகிறது. அப்போது அந்த வழியாக வந்த அதிவிரைவு ரயில் மோதியதில் இருவரும் பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டனர். இதனால் இருவரது உயிரும் சம்பவ இடத்திலேயே பிரிந்தது.