இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக பெரும் பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.
வெளியான தகவலின் படி, அவரது பதவிக்காலத்தில், கடந்த 2023 செப்டம்பரில், அவரது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள லண்டனுக்குச் சென்றதற்கான அரசு செலவுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்றது.
இந்தச் சந்தேகத்திற்காக, விசாரணையின் பின்னர், அவரை காவலில் எடுத்துள்ளதாக மூத்த போலீஸ் துறைத் துணைதலைவர் ஒருவர் தெரிவித்தார். முன்னாள் தலைவரான ரணில் மீது இந்த குற்றச்சாட்டுகள் முன்னாள் ஆட்சியின் நிதிநிலை மீதான விமர்சனங்களையும், நம்பிக்கையையும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
