அனுமதியின்றி கட்சிக் கொடி ஏற்றியதாக தமிழக வெற்றிக் கழக மாவட்ட பொறுப்பாளர் உட்பட 20 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை பகுதியில் நேற்று த.வெ.க சார்பில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு காவல்துறையிடம் உரிய அனுமதி பெறவில்லை எனக்கூறி கட்சியினர் கைது செய்யப்பட்டனர். கட்சிக் கொடியும் அகற்றப்பட்டது. விஜய் கட்சி தொடங்கிய பின்னர் கட்சியினர் மீது வழக்கு பாய்வது இது முதன்முறையாகும்.