2024-25ம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். திருக்குறள் ,சிலப்பதிகாரத்தை மேற்கோள் காட்டி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வருகிறார்.  அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்தவகையில் பத்தாயிரம் விவசாயிகளுக்கு தலா இரண்டு மண்புழு உரப்படுகைகள் வழங்கிட ஆறு கோடி மானியம் வழங்கப்படும். முதலமைச்சரின் மன்னுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்திற்கு 206 கோடி ஒதுக்கீடு.