சென்னை, கோவையில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி இன்று சென்னை வரும் நிலையில் வெடிகுண்டு மிரட்டலால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், மாணவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் குறுஞ்செய்தி அனுப்புகின்றன. மேலும்,மாணவர்கள் வெளியேற்றப்பட்டு காவல்துறையினர் பள்ளிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.