சட்டப் பேரவைகளில் லஞ்சம் வாங்கும் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. லஞ்ச வழக்குகளில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு விதிவிலக்கு இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பேசுவதற்கு உறுப்பினர்கள் லஞ்சம் வாங்குவது சட்டப்படி குற்றம் என தலைமை நீதிபதி சந்திர சூட் அடங்கிய 7 கொண்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டு குறித்த விசாரணையில் விலக்கு கேட்க முடியாது என கூறப்பட்டுள்ளது.