மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் பள்ளியின் சுற்றுச் சுவருக்கு அருகில் மாணவர்கள் செல்லாதவாறு பார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.