
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான பணிகளில் பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான பணிகளில் பள்ளிக்கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கான சேமிப்பு கணக்குகளை தொடங்குவதற்காக அஞ்சல் துறையுடன் தமிழக பள்ளிக்கல்வித்துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்க தொகையை செலுத்த வங்கிக் கணக்கு அல்லது சேமிப்பு கணக்கு தேவை. வங்கிகளில் கணக்கு தொடங்க பல ஆவணங்கள் கேட்கப்பட்டு இழுத்தடிப்பதாக புகார் அளித்துள்ள நிலையில் மாணவர்களுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.