சென்னையில் மழை வெளுத்து வாங்கி வருவதால் கத்திப்பாரா உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, கடலூர், விழுப்புரம், உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மழை வெளுக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மதியத்திற்கு மேல் மழை பெய்யும் என்பதால், பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அளிக்க பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.