மதிமுகவில் இருந்து விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார்..

அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார்..  மதிமுக அவைத்தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக துரைசாமி அறிவித்துள்ளார். திருப்பூரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என கூறி அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியவர் திருப்பூர் துரைசாமி.. மதிமுகவை  திமுக உடன் இணைக்க வேண்டும் என திருப்பூர் துரைசாமி வைகோவுக்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.