நாடு முழுவதும் ஏப்ரல் 16ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக சற்று நேரத்திற்கு முன்பு செய்தி வெளியானது. இந்த நிலையில் ஏப்ரல் 16ஆம் தேதி என்பது தேர்தல் தொடர்பான பணிகளை திட்டமிட்டு முடிப்பதற்கான உத்தேச தேதி மட்டுமே, மக்களவைத் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதுவரை இது போன்ற செய்திகளை பரப்ப வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.