தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் என்ற பெயர் தெரியுமாறு அறிவிப்பு பலகைகளை வைக்க வேண்டாம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. சாலையில் செல்பவர்களுக்கு இது மது அருந்த தூண்டுகோலாக இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது சாலைகளில் பயணிப்போருக்கு தெரியும் வகையில் இருக்கும் பெயர் பலகைகளையும் விரைவில் அகற்ற உள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.