கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர்கள் பினு – ஷிஜா தம்பதி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில தினங்களாக பினு மற்றும் ஷிஜாவுக்கு இடையே பொருளாதாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தம்பதி இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஷிஜாவை பினு வெட்டி உள்ளார்.

இதை பார்த்து பயந்து போன குழந்தைகள் தடுக்க முயற்சித்த போது அவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அருகே நடந்து கொண்டிருந்த கோயில் நிகழ்ச்சியில் இருந்த உறவினர்களிடம் குழந்தைகள் ஓடிச்சென்று கூறியுள்ளனர். உறவினர்கள் வந்து பார்த்தபோது அங்கே இரத்த வெள்ளத்தில் ஷிஜா இறந்து கிடந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தப்பியோடிய பினுவை தேடி வந்த நிலையில் அப்பகுதியில் இருந்து சற்று தொலைவில் இருந்த ரயில்வே தண்டவாளத்தில் அவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.