உத்தர் பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மக்கள் பாதுகாப்பாக கட்டிடத்தை விட்டு வெளியேறினார்.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆரம்பத்திலேயே மக்கள் வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.