5 வயது சிறுமி செல்போனில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்த போது மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹதைகேத் என்ற இடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. காமினி என்ற சிறுமி வீட்டில் இருந்த செல்போனில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென சுருண்டு விழுந்தார். சிறுமியை அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமி மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.