திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இந்நிலையில் ஒவ்வொரு மாதத்திற்கான தரிசன டிக்கெட் முன்கூட்டியே ஆன்லைனில் தேவஸ்தானம் சார்பாக வெளியிடப்படுகிறது. அதன்படி ஏப்ரல் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் ஜனவரி 24ஆம் தேதி இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் காலை 10 மணி முதல் திருப்பதி தேவஸ்தான https://tirupatibalaji.ap.gov.in இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.