கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காதல் விவகாரம் காரணமாக பெற்ற மகளையே கொன்ற பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். 11ஆம் வகுப்பு படிக்கும் மகளை ஏரியில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டு காணாமல் போனதாக பெற்றோர் நாடகமாடி இருக்கின்றனர். மாணவி கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தாய், தந்தை, உடந்தையாக இருந்த பெரியம்மா ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.