ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் சபர்மதி ஆக்ரா அதிவிரைவு ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு 1 மணி அளவில் நடந்த இவ்விபத்தில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. தொடர்ந்து, மீட்பு படையினர் சம்பவ இடத்தில் விரைந்து செயல்பட்டு வருகின்றனர். விபத்து குறித்து, ரயிலில் தூங்கிக்கொண்டிருந்தபோது பெரும் சத்தம் கேட்டதாக பயணிகள் கூறினர்.