பல ஆண்டுகளாக பிரிந்து இருந்த ஓபிஎஸ்-உம், டிடிவி தினகரனும் இன்று சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் கூட்டாக பேசிய அவர்கள், “இணைந்து செயல்பட முடிவு செய்திருக்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதா உருவாக்கிய கட்சியை அப்படியே தொண்டர்கள் கையில் ஒப்படைக்க வேண்டும் என்ற சுயநலமற்ற எண்ணம்தான் சந்திக்க வைத்திருக்கிறது. அரக்கர்கள் போல செயல்படுபவர்களிடம் இருந்து கட்சியை மீட்போம்” என்று கூறினர்.