பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த கேத்தரின் (வயது 92) சற்றுமுன் காலமானார் என பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் பேரனான இளவரசர் எட்வர்டை 1961-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர், ‘கெண்ட் ராணி’ என்றழைக்கப்பட்டார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு அரசியல் வாழ்க்கையில் இருந்து விலகியிருந்தார். வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவரது மறைவால் அரச குடும்பம் மட்டுமல்லாமல், ப்ரிட்டனின் அரசாங்கமும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளது.