இன்று ஒரே நாளில் பாஜகவில் இருந்து முக்கிய தலைவர்கள் முதல் நிர்வாகிகள் வரை அடுத்தடுத்து விலகுவதால் கட்சி தலைமை அதிருப்தி அடைந்துள்ளது. இன்று காலையில் கொளத்தூர் தொகுதி நிர்வாகிகள் கூண்டோடு விலகி திமுகவில் இணைந்தனர்.  இந்த நிலையில் பாஜக எஸ்டி பிரிவு மாநில செயலாளர் கிருஷ்ணகிரி பாப்பண்ணா தனது ஆதரவாளர்களுடன் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். இது பாஜகவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.