மணிப்பூரை பதற்றம் நிறைந்த மாநிலம் என்று அம்மாநில ஆளுநர் அறிவித்திருக்கிறார். மாநில அரசுக்கு உதவியாக ராணுவத்தை பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து 6 மாதங்களுக்கு மணிப்பூர் பதற்றமான மாநிலமாக நீடிக்கும். இனி ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கப் போகும் அம்மாநிலத்தில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.19 காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகள் பதற்றமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.