மிக்ஜாம் புயல் எதிரொலியால் நாளை ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது புயல் வேகம் அதிகரித்து, பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.