வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதுபோன்ற சூழலில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று இன்று காலை அரசு உத்தரவிட்டிருந்தது. ஆகையால், நாளையும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.