தமிழகத்தில் பருவமழை காரணமாக காய்ச்சல் அதிகரித்துள்ளது. அதோடு சேர்த்து சளி, இருமல், தொண்டை வலி, உடல் வலி, மூச்சுவிட சிரமம் ஆகிய அறிகுறிகள் பலருக்கு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற மக்கள் அதிகம் கூடுகின்றனர். பருவமழை காலங்களில் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டியது நமது பொறுப்பு. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள் மக்களே.