பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் நாளை காலை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் அரிசி கார்டுதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழு கரும்பு, ₹1000 ரொக்கம் பொங்கல் பரிசாக தரப்படுகிறது. இதற்காக வீடு வீடாக டோக்கன்கள் வழங்கப்பட்டது. டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி, நேரம் படி நாளை முதல் பரிசுத் தொகுப்பை ரேஷன் கடை சென்று பெறலாம்.