தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த உடன் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட ஆர்.சண்முகசுந்தரம், அரசின் முக்கிய வழக்குகளை கையாண்டு வந்தார். சமீபகாலமாக அவர், சரியாக வழக்கு விசாரணையை நடத்தவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.