நடுக்கடலில் அக்கரைப்பேட்டை கீச்சாங்குப்பம் மீனவர்கள் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டுள்ளது. கீச்சாங்குப்பத்தை சேர்ந்த 10 பேர் விசைப் படகில் சென்ற போது பைபர் படகில் மீன்பிடி வலை சிக்கியது. இதனால் ஏற்பட்ட மோதலில் அக்கரை பேட்டையை  சேர்ந்த இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக எட்டு பேரை போலீசார் கைது செய்த நிலையில் மீனவ கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.