தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அவரின் உடல் சென்னையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று தேனி பசுமலை தேரியில் வைக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்து ஊர்வலமாக இடுகாட்டிற்கு எடுத்துச் சென்ற நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் இறுதி சடங்கு செய்தனர். அதன் பிறகு அவரது உடலுக்கு பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள். இனி இந்த முகத்தை பார்க்க முடியாது என்ற கனத்த இதயத்துடன் கண்கலங்கி நின்ற ரசிகர்களிடமிருந்து மாரிமுத்து விடை பெற்றார்.