தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதாக பரவும் தகவல் புரளி என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தேர்தல் ஆணையம், நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்தி தவறானது. அதுமாதிரியான எந்த அறிவிப்பையும் ஆணையம் இதுவரை வெளியிடவில்லை. செய்தியாளர் சந்திப்பு மூலம் மட்டுமே தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என விளக்கமளித்துள்ளது.