தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆன்லைனில் குறைந்த விலையில் பட்டாசு தருவதாக கூறி மோசடி நடைபெறுகிறது. பலரும் இதுபோன்று பணத்தை இழந்துள்ளனர். எனவே இது போன்றவற்றை மக்கள் நம்ப வேண்டாம் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதிக்கப்பட்டோர் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஷ் ஆன் டெலிவரி முறையை உறுதி செய்வதன் மூலம் பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தலாம் எனவும் மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.