கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜவஹர் நகரை சேர்ந்த திருமணம் ஆகி ஆறு மாதங்களை ஆன மகள் தியா காயத்ரி, தந்தை கணேசன் மற்றும் தாய் விமலா ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். கருத்து வேறுபாட்டால் காயத்ரி கணவனை பிரிந்து தாய் வீட்டுக்கு வந்த நிலையில் 3 பேரும் தற்கொலை செய்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.