கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் திமுக கவுன்சிலர் 15வது வார்டு ஜாமல் முகமது திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.பள்ளப்பட்டி பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். சற்றுமுன் நகராட்சி ஆணையரை சந்தித்து ஜமல் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.