திருச்சி நரசிங்கபுரத்தில் மணல் கடத்தலை தடுத்த வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் சமீபத்தில் தாக்கப்பட்டார். அவரை திமுக நிர்வாகி மகேஸ்வரன்தான் தாக்கியதாக தகவல் வெளியானது. அவர் அப்பகுதியின் ஊராட்சித் தலைவராகவும் இருக்கிறார். இந்த சம்பவத்தில் மகேஸ்வரன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது திமுகவில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அவர் மீதான விசாரணையை கட்சி தொடங்கியுள்ளது.