நம் நாட்டில் மத்திய ரிசர்வ் வங்கி ரூ,2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்திருக்கிறது. அதோடு ரூ.2000 நோட்டுகளை செப். 30-ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடைகள் மற்றும் பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்ட இடங்களில் ரூ.2000 நோட்டுகள் செல்லுபடியாகாது என கூறப்படுகிறது. பலரும் ரூ.2000 நோட்டை வாங்க மறுப்பதாக புகார் எழுந்து வருகிறது.

இது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து தமிழகத்தில் எங்கெல்லாம் ரூ.2000 நோட்டுகள் செல்லுபடியாகும் என்ற விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில், டாஸ்மாக்கில் ரூ.2000 நோட்டுகளை கொடுத்து பாட்டில்களை வாங்கிக்கொள்ளலாம். மதுக்கடைகளில் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என பரவிய தகவல் போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று அரசு பேருந்துகள் மற்றும் ரேஷன் கடை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் ரூ.2000 நோட்டுகள் செல்லும் என அத்துறை அமைச்சர்கள் தெரிவித்து உள்ளனர்.