பாஜக கூட்டணியில் உள்ள புதிய நீதி கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அக்கட்சித் தலைவர் ஏசி சண்முகம் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை எதிர்த்து ஏசி சண்முகம் களமிறங்க உள்ளார். தாமரை சின்னத்தில் போட்டியிடுவதன் மூலம் இன்று திமுக மற்றும் பாஜக நேரடியாக மோதுகிறது.