தமிழகத்தில் விருப்ப ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரி அருண் ராஜ் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. அவர் தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் பணியில் இருக்கும் போதே ஓய்வு பெற்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது மிகவும் ஆச்சரியமாக பேசப்பட்டது.

இந்த நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் வேட்பாளராக அருண்ராஜ் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதியில் அருண்ராஜ் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகம் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.