தமிழகத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நடந்த அரையாண்டு தேர்வு இன்றுடன் நிறைவு பெறுவதால் டிசம்பர் 23ஆம் தேதி நாளை முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாகவும் ஜனவரி இரண்டாம் தேதி பள்ளி திறந்த பிறகு அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.