தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி வருகின்ற ஜூலை 28ஆம் தேதி அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என கூறப்படுகின்றது. இதன் காரணமாக ஜூலை 28ஆம் தேதி பள்ளிகள் இயங்காத நிலை உருவாகியுள்ளது. எனவே ஆசிரியர்களுடன் அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.