தமிழ்நாடு முழுவதும் அனுமதி இன்றி பேனர் மற்றும் விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உரிமம் பெறாமல் விளம்பரப் பலகை வைக்க முடியாது. உரிமக்காலம் முடிந்ததும் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். விபத்து நடந்தால் பேனர் மற்றும் விளம்பர பலகை வைத்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.