தமிழகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் மற்றும் உடனடியாக பணியமர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர். நேற்று நடந்த இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு கூடுதலாக 2500 ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்து போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவித்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.