தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாளை திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும் நாளை மறுநாள்தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களிலும் மிக கனமழையும் திருப்பூர் கோவை திருச்சி குமரி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.