சேலம் மாவட்டம் இரண்டாவது பிரிக்கப்பட்டு இன்று முதல் ஆத்தூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டதாக வெளியாகும் செய்தி முற்றிலும் தவறானது. சமூக வலைத்தளங்களில் இது இதுபோன்று அவதூறு பரப்பி மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.