தமிழகத்தில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை வருகின்ற ஜூன் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன் பிறகு பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை ஜூலை 1ஆம் தேதிக்குள் மதிப்பீடு செய்து அந்த பணியிடங்களை நிரப்பிட கோரும் கருத்துக்களை ஜூலை 15ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அவ்வாறு பெறப்படும் கருத்துக்கள் மீது செப்டம்பர் 30ம் தேதிக்குள் அரசாணை வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.