மொழிப்போர் தியாகிகளின் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 25ஆம் தேதி தமிழகத்தில் அனுசரிக்கப்பட்ட வரும் நிலையில் நேற்று மொழிப்போர் தியாகிகள் தின பொதுக்கூட்டத்தில் முதல்வர் கலந்து கொண்டார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி தொடர்ந்து இந்தி திணிப்பில் ஈடுபட்டு வருகிறார் என்று கூறினார்.

மேலும் 12 வயது முதல் இந்தி திணிப்பிற்கு எதிராக போராடியவர் கலைஞர். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற இறுமாப்புடன் இருக்கின்றேன் என கூறியுள்ளார். கொரோனாவை விட கொடியது பாஜக என்றும் முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.