தமிழகத்தில் நாளை முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை சேவல் சண்டை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கால்நடை மருத்துவர் மேற்பார்வையில் சேவல் சண்டை நடத்த வேண்டும். எக்காரணத்தை கொண்டும் சேவல்களை துன்புறுத்தக் கூடாது. சேவல்களுக்கு மது கொடுக்கக் கூடாது. காலில் கத்தி கட்டக்கூடாது என பல நிபதனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறினால் போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.