
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசியை அடுத்த பழங்கரையில் சாலையோரம் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் சாலையோரம் நின்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் பயணம் செய்த மோனிஷ்(28), அபர்ணா(26), ஹேமா(21) ஆகிய மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.