ஜனவரி 19ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. திருவாரூர், நாகை, குமரி, தேனி, தருமபுரி ஆகிய மாவட்ட டாஸ்மாக் கடைகளில், மதுபான விலையுடன் கூடுதலாக ரூ.10 பெற்றுக்கொள்ளப்படும்.காலி மதுபாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் மீண்டும் ஒப்படைத்து, கூடுதலாக கொடுத்த ரூ. 10ஐ பெற்றுக் கொள்ளலாம். இதுதொடர்பாக டாஸ்மாக் பணியாளர்களுக்கு உத்தரவு பறந்துள்ளது.