அண்ணா அறிவாலயத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் மதிமுக நடத்திய பேச்சுவார்த்தை நிறைவுபெற்றது. 2 மக்களவை தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடத்தையும் மதிமுக கேட்டது. ஆனால், திமுக ஒரு மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை தொகுதியை ஒதுக்க திட்டமிட்டுள்ளது. மேலும், கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, இந்த முறை சொந்த சின்னமான பம்பரத்தில் போட்டியிடுவதாக திட்டவட்டமாக அறிவித்துள்ளது.