கிராம சுகாதார செவிலியர்கள் நேரடி பணி நியமனத்திற்கு அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியரை கிராம சுகாதார செவிலியராக நியமிக்க கோரிய வழக்கில், உரிய பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள் அனைவருமே கிராம சுகாதார செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனக்கூறியதோடு, அரசு தரப்பில் விரிவான பதிலளிக்க கூறி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.